இத்தந்திரத்தில் மேல், மாணாக்கரை நோக்கி, `முப்பதம், முச்சூனிய தொந்தத்தசி` என்னும் அதிகாரங்களில் சுருங்கக் கூறிய பொருள்களையே இவ்வதிகாரத்தில் பரபக்கதாரை நோக்கிச் சிறிது விரிவாகக் கூறுகின்றார். இது பதினேழு மந்திரங்களை யுடையது. பல மகாவாக்கியங்களைப் பற்றியும் கூறிய போதிலும் தலைமை பற்றி, `தத்துவமசி மகாவாக்கியம்` எனப் பெயர் கூறப்பட்டது.